mardi 9 mai 2017

தெரியும் என்பார் தெரியாது !!!

தெரியும் என்பார் தெரியாது! அறிவேன் என்பார் அறியாது!
தெரியாமல் தெரிந்தும் தெரியாததை தேடியும்
தொடரும் வாழ்வில் இடையில் போவதும்
யாருக்கும் தெரியாது!
பிறக்கும் முன்னே என்னையும் உன்னயும்
அன்னைக்கும் தெரியாது!
அன்னை மடியில் எவன்டா வைத்தான்
அவனுக்கும் தெரியாது!

உயிரே உயிரின் ராச்சியம் பூச்சியத்திற்குள்ளே
பூட்டிய கதவைத் திறந்து போகும் உயிரை
யாருக்கும் தெரியாது!
இத்தனை சூட்சுமம் யார்தான் செய்வார்
இறைவன் என்றால் அவனையும் தெரியாது!
இதில் யாரை யார்தான் நம்பி வாழ்வது
எனக்கும் தெரியாது! உனக்கும் தெரியாது!
ஊருக்கும் தெரியாது!  
தெரியும் என்பார் தெரியாது!
அறிவேன் என்பார் அறியாது!
பூமிக்கு யார்தான் சொந்தம் சொந்தம் 
இறைவா உனக்கும் தெரியாது....!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...