mercredi 24 mai 2017

மடல் திறந்த இதழ்கள்!!

அன்றலர்ந்த தாமரையின்
ஆருயிர் தோழனே
தினம் நீராடும் உன் தோழியின்
கொடி இடை நீ வருடுவதால்
இதழ் மலர்ந்து தருகிறாள்
பரிச முத்தம் உன் தோழி!

கொண்டவனின் துணை இன்றி
விழி நீர் வறண்டோடி
நின்று லர்ந்து வீழ்ந்துவிட்டேன்
மணல் காட்டில்!
தண்ணீர் இல்லையேல் தாமரை உதிர்கிறாள்
கண்ணீர் வெள்ளத்திலே நானும் காய்கிறேன்
மடல் திறந்த இதழ்களை,
விளுமியங்களே காயம் செய்கின்றன!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...