mardi 16 mai 2017

எதுவரை என்பது தெரியாது !!!

பொய்யின்றி பொய் சொல்லும் உன் கண்கள் அழகு
உயிருக்கு உயிரான சினேகம் அதன் அழகு
திகில் நிறைந்தே இருந்தது கடந்த இரவும்
நான்கு சுவர்களுக்குள் பக்கம் பக்கமாய்
புரட்டி நாம் படித்துக் கொண்டிருந்தோம்
இருட் டறையும் கண்டு விரண்டது
பூத்திரியும் ஒரு கணம் மௌனித்து
சுடர் ஒளி வீசி வெக்கித்து குனிந்தது

எதுவரை என்பது இருவக்கும் தெரியவில்லை
அதுவரை என்றால் ஆனந்தமே ஆருயிரே
அன்று நாம் போடும் முற்றுப் புள்ளியில்
ஆயுளும் முடிந்துவிடும்
முற்றுப் புள்ளியை முதலில் இடுவது யார்
அதுதான் புரியவில்லை இருவருக்கும்.....  

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...