vendredi 12 mai 2017

கூட்டுக் குடும்பம் !!

கூட்டுக் குடும்பத்தின் முற்றம்  
குறுக் கெழுத்துக்கள் வாழ்கின்ற
சதுரங்கக் கட்டம்....
ஒவ் வொரு சுவர் கட்டங்களுக்குள்ளும்
ஒன்றுக் கொன்றான ஜீவ நாடி
துடித்துக் கொண்டே இருக்கும்

கனல் மழை என்ன கடும் புயலென்ன
கூட்டுக் குடும்ப முற்றத்தில்
கண் தூசி கொள்ளும் முன்னே
பொத்தி வைச்ச மல்லிகையாய்
கரங்கள் யாவும் காக்கும்....
கால தேவனை காதல் செய்
கரும்பாகும் உன் பிறப்பு...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...