jeudi 25 mai 2017

எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!

நிழல் தரு உயர்வில் நீள நினைந்தேன்
ஏந்திழை என் செய்வேன் ஏதறிவேன்
உதிர்வெனும் இறப்பில்
இமைகளும் இளந்தேன் ...
தனிமை கொடிதாய் கொன்றிட        
இதய நரம்புகளையே (சு)வாசித்தேன்
துளிர்கள் பற்றின துணைக் கரம் பெற்றேன்
பூக்களின் வாசம் பூமிக்கும் தெளித்தேன்
கால மாற்றம் கண்ணீரை துடைத்தது
பூபாளம் பாடும் குயில்களே
கூடி வாருங்கள் குடியிருக்க   
இலையுதிர் காலம் திரும்பும் முன்னே
வசந்த காலம் வாழ வா எங்கிறது
நல்லார் இங்குளார் எனில்
எல்லோர்க்கும்,
பெய்யென பெய்யும் மழையே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...