mercredi 8 mars 2017

இருப்பது கூடொன்றே காடு செல்ல !!


யாரோ ஒருவன் மீட்டுகிறான்

யாரோ ஒருவன் யாசிக்கிறான்

யாரோ ஒருவன் உன் உழைப்பில்

உருவம் பெருத்தே வாழுகிறான்

இதுவரை உன்னிடம் என்னவுண்டு

அவனிடம் வாழ வீடுண்டு

நாடு நாடென நாடியோரே

நலம் கெட புழுதியில் வீழ்த்திவிட்டார்

அள்ளிக் கொடுத்த வெள்ளிப் பணம் எல்லாம்

அவனவன் திண்டே தீர்த்தாச்சு !!

இன்னும் என்னடா சுறண்டுகிறான்

இருப்பது கூடொன்றே காடு செல்ல !!!



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...