samedi 25 mars 2017

எந்த நிலை வந்தாலும் கலங்காதே !!!

பாலுக்குப் பாலகன் பசியென்றழுதிட
மடிப் பாலூட்டி நின் தாய் முகம் மலர  
இகபரம் காணும் உயிரே !  

வேண்டா நிலையுறு கூடுதனை
நீ விட்டுச் செல்ல மனம் இன்றி
நீள் மூச்செறிந்து நீண்டு கிடந்திடினும் 
பசும் பால் பருக்கி கரும வினை அகற்றி
இறைவனை வேண்டியே நின்னுயிர் பிரித்து   
பிணம் எனச் சொல்வார் சுடு காடு சுமந்து
சுட்டெரித்துச் செல்வார் உறவென வந்தோரே

பந்த பாசம் எல்லாம் நிந்தன் உயிர் உள்ளவரை
எந்த நிலை வந்தாலும் கலங்காதே
காத வழி தூரம் கூடி வர
உறவும் இல்லை உன்னோடு !!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...