lundi 20 mars 2017

நீ உயர்ந்தவனா தாழ்ந்தவனா !!!

துயர் குறைப்பு குறுஞ் சாலை விழிதனில்  
அரிவிடும் துளியில் மெல்லிய நீரோட்டம்
குடும்ப மாலையில் கதம்பப் பூக்கள்
காய்ந்தாலும் அது கற்பூர வாசம்
பச்சிலையும் நிறம் மாறி
சருகான போதும்
துளிர்த்தே நிலைக்கிறது மரங்கள்
இச்சை உள்ள மனிதன்
அச்சம் இன்றி உலா வர வர
நாளிகை முட்கள் நகர்ந்தோடி
நாட்கள் வந்து போகின்றது  
நீ உயர்ந்தவனா தாழ்ந்தவனா
உன் னுயிர் கட்டை எரிந்து நீறானாலும்
வாழ்ந்த நாட்கள் வரி எழுதி வாசகம் சொல்லும்
நீயே சொல் யார் நீ...

பாவலர் வல்வை சுயேன்



Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...