lundi 27 mars 2017

இதயம் இரும்பல்ல....


ஈரமான இதயமே உனக்குள் இன்னும்
அந்த ஞாபகத்தின் ஓர் துளி !
யாருக்கு யாரென்ற தீர்மானம்
பேருக்கு மனசுக்குள்
நடக்கிறது போராட்டம் !!
அவளுக்கும் எனக்குள்ளும்
அவிழ்க்கப் படாத முடிச்சு அது
விதியா ? மதியா ?
எழுதப்பட்ட ஓவியம் சிதைந்தாலும்
அவரவர்க்கான வண்ணச் சித்திரங்கள்
பிள்ளை மலர்களாய் தத்தித் தவழ்ந்து
ஆடி அடங்கும் வாழ்வுக்கு
அன்பு முத்திரை தந்துவிட்டது
ஆராதிக்கின்றேன் வாழ்வே
இதுதான் உன் பயணம் என்பதால்   


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...