dimanche 5 mars 2017

ஊனம் கொண்ட தமிழா ....


(பண்பாடு - 12)
உலகம் போற்ற உயர்ந்த தமிழா
உந்தன் தெய்வம் எங்கேயடா
அவனை நினைத்து ஒரு துளி கண்ணீர்
நீ சிந்த இன்னும் எத்தனை நாள்
உனக்கு வேண்டும்
ஊனம் கொண்ட தமிழா...


உனக்குள் இருக்கும் இருளை போக்கு
தானாய் விடியும் தமிழீழம்
தேசியத் தலைவன் இறைவனானான்
இன்னும் நீ இருளில்லடா
விழி இருந்தும் குறுடன் நீயே
விடியலை எங்கே தேடுகிறாய்
விதைத்த விடுதலை வீணோடா
உனக்கே விலங்கை நீ பூட்டுகிறாய்
எழடா எழடா தமிழா எழு எழு
உந்தன் தேசம் உன்னை நம்பி
உன்னால் முடியும் என்றுதானே
உன்னிடம் தந்து இறைவனானான்
தமிழினத் தலைவன் அவனே பேரொளி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...