mardi 28 mars 2017

இன்னுமா நீ உறக்கத்தில் !!!

துயரின் தூரல்கள் ஓய்ந்தாலும் - நனைந்த
இதயத்திலிருந்து இன்னும்
வீழ்ந்து கொண்டே இருக்கிறது துயரத் துளிகள்
இரு முனை போராட்டத்தில் இன்னும்
உதடுகளின் நேசம் 
புரட்சி என்போரும் மருட்சி நாடகம் ஆடுகிறார்
உண்மையும் பொய்யும் கலந்து போடுகின்றன
இரட்டை கோலங்கள்  
விடி வெள்ளி முளைத்தும்
விடிவானம் துலைந்துவிட்டதே வெகுதூரம்
முடிந்த யுத்தம் முடிந்ததுதானா
அடிமை வாழ்வை அள்ளி முடித்து
எத்தனை காலம்தான் வாழ்வாய் தமிழா
உனக்காக உன் தலை முறைக்காக
நீயே எழுச்சி உறு
தானைத் தலைவன் மீண்டும் வரான்
உன் கையில் தந்துவிட்டான் ஈழ மலர்வை
இன்னுமா நீ உறக்கத்தில்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...