mardi 29 novembre 2016

நந்தவனப் பந்தலிலே மாறாப்பு !!!



பூ மேனி பூத்திருக்க பூ கொய்து போனவனே
செம் பவளம் சிரிக்குதடா செங்கோல் மன்னா
எத்தனை முறை நீ கொய்தாலும்
நந்தவனப்  பந்தலிலே மாறாப்பு சிக்குதடா
நூலாடை விடை கேட்டு வீழும் முன்னே
நீரோடை ஒன்று நதி ஆனதிங்கே
போராடும் மனசு போர்க் களத்தின் புரவியிலே
வீழ்ந்தாலும் நான் விழுப்புற்றே வீழ்வேன்
எனை வெல்ல என்று நீ வருவாய்
கள முனையில் காத்திருக்கேன்
எத்தனை முறை நீ பூக்களை கொய்தாலும்
வெற்றி நிச்சயம் எனக்கே எனக்குத் தான்....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...