lundi 23 mai 2016

குற்றவாளி யார் !!!!!



தூற்றுவார் தூற்றவும் போற்றுவார் போற்றவும்
மண்ணில் வந்து தவழ்கிறது மழைத் துளி !
மனிதா நீ என்ன தவம் செய்தாயோ
ஆழக் கிணறு தோண்டவில்லை
ஆகாசம் ஏறி வாங்கவில்லை
வளங்களெல்லாம் வாரித் தந்து
வடிந்து செல்கிறது மழை நீர் உன் வாழ்வுக்கு !              

வடிகால் மறித்து வரப்புயர்த்தி நிந்தனை செய்தவனே
கொள்ளுமிடம் கொள்ள சமுத்திரம் காத்திருக்க 
மாடி மனை கோடி செல்வம் அழிந்ததென்று
வன் சொல் வீசும் முன் உன் மனசிடம் கேட்டுச் சொல் !
இயற்கை தந்த கொடை பெற்று நீ என்ன செய்தாய் அதற்கு !

பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...