mercredi 4 mai 2016

நற் திங்களின் எழுகை இறப்பில் !



நற் காலம் இதுவென நான் பூட்டி நிறுத்தம் செய்து
அழைத்துச் செல்வதில்லை சாஸ்திரம்
மெய் வீழ்த்தி பொய் அமர்த்தி
புறையோடும் நோயில்
பூஞ்சணம் கொண்ட காலம் இது !

நற் திங்களின் எழுகை இறப்பில்
தென்றலுக்கும் மரணப்படுக்கை
மயானம் எங்கும் நாய்களின் ஓலம்
அரியாசனத்தில் நல் ஆள்வார்கள் இல்லை
செங்கோலில் சொறி நாய்களின் படை
சாமரையின் கவரி முடிகள்
காவலனின் சுவாசத்தில்
கருத்தரித்து கண்ணீரில் கரைகின்றன !

சுவாசம் இழந்த கூட்டுக்கு வாசம் தெழிக்கும்
பன்னீர் புஸ்பங்களை கண்டு
செயல் இழந்து மௌனராகம் வாசிக்கின்றாள் நீதி தேவதை
யாரை யார்தான் வெல்வாரோ நான் அறியேன் பரம்பொருளே?

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...