என்னெதிரே என்றும் நிலா
இன்று ஏனோ நாணம் மறந்துநில்லாமல் நிற்கின்றாள்
பொன் மஞ்சள் நிலா ..
நிர்வாணம் கண்டும்
நிலை குலையவில்லை நான்
பருவம் பூர்த்தும் என்னோடு
பழகிய எழிலே இவள்
ஆடை குறைத்து யாடை செய்த போதும்
யாரும் அற்ற வேளையிலும்
தொட்டதில்லை நான் இவள் பட்டுடலை
ஏனோ நாணுகிறாள் ஏனோ கூசுகிறாள்
யார் கை பட்டதோ இன்று இவள் மேனியில்
அடடா நேற்றுரவுதானே இவளின் முதலிரவு
பூத்திரியும் குறைத்துவிட்டாள்
பார்க்கவில்லை நான் எதையும்
கண் யாடை வீசி
என் கற்பை பரிசோதிக்கின்றான்
இவளின் காதலனும் என்னிடம்
கண்ணாடி விம்பம் நான் என் செய்வேன்
ஒளியை நோகிறேன் ..
அணைந்து ,
அள்ளிக் கொட்டு இருளை என்று
பொல்லாத உலகே போதும் உன் பொல்லாங்கு...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...