lundi 22 septembre 2014

உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது ..


உயிர் மூச்சு எனக்குள் ஒளிந்திருக்கிறது - என்
பேச்சில் ஒளிவும் நியமும் கலந்திருக்கிறது    
இல்லை என்றால்  நிலை கண்ணாடி என் மேல்
கணை, தொடுப்பேன் என்கிறது...      
வாழ்ந்தவரை போதும் என்கிறேன்    
போதாது என்கிறான்
என்னொருவன் எனக்குள்ளே...    
அடிமைத் தழை இன்றி அங்கீகாரத்துடன்  
தாய் மண்ணை தழுவும்
தமிழீழ ஆலமரத்தின் விழுதுகளை
பார்த்துவிட்டுப் போ என்று...
     
விடிந்த விடியலை அறுத்த வல்லரசுகளால்  
தணியாமல் கிடக்கிறது தமிழீழத் தாகம்      
விடியுமா விடியாதா என்ற கேழ்வி மட்டும்
மிஞ்சி விட்டது...
மனசில் தெம்பில்லை மார்க்கம் ஏதும் இல்லை  
நாளைய மரணத்தை இன்றே வா என தூதனுப்பி   
கை,கோர்த்துச் செல்லக் காத்திருக்கிறேன்....
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...