mardi 23 septembre 2014

என்னடா உலகம் இது இதில் இனிமை எங்கே இருக்கிறது ..


என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது
இன்பம் இரு நாள் துன்பம் பல நாள்
இரு விழி நீரில் நனைகிறதே.. ..

அன்பெனும் உறவில் ஆயிரம் தொல்லைகள்
அனு தினம் நானும் பார்த்துவிட்டேன்..
எனக் கொரு பிள்ளை பிறந்துவிட்டால்
என் நிலை எப்படி எடுத்துரைப்பேன்..
பெற்றவர் இல்லை தோள் தாங்க
நால்வர் வரலாம் என் பிணம் தாங்க
இதில் காதல் கொள்வதும் கண்மணி என்பதும்
காலம் விதைத்த பயிரடா
கண்ணீர் சிந்தும் மனிதராலே
கடலே உப்பாய் ஆச்சுதடா
கால தேவனே கருணை இருக்கா
விழி நீர் வற்றிப் போச்சுதடா
என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது.. ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...