mercredi 18 juin 2014

நிழல் கூட்டுப் பறவைதான் நான் ..

நிழல் கூட்டுப் பறவைதான் நான்
சகோதரச் சரத்திற்குள் தன் நிறைவுற்றது
என் பிறப்பு ...
முளைத்த சிறகை விரிச்சுப் பறந்தேன்
திசை மாறவில்லை ...
அன்னை தந்த அன்பையும்
தந்தை தந்த நிழலையும்
உறவெனும் மாளிகைக்கு  
அத்திவாரம் இட்டேன்
பாசம் எனும் நூல் வேலியே
எனது அணிகலன் ...
இறக்கை விரித்த என் குஞ்சுகளும்
இல்லாத ஊருக்கு போகவில்லை
என் முகம் பார்த்து ,
புன்னகைத்துச் செல்கின்றன ...
இதயம் கனிந்து இளைப்பாறுகின்றேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...