mardi 17 juin 2014

மகரந்தக் கூடலின் நடுவே வண்டுகளின் நடனம் ..

மகரந்தக் கூடலின் நடுவே
வண்டுகளின் நடனம் – இது
பூக்களுக்கு பிடித்த முத்தம்
 
கலைக் கூடலின் சிலைகளில்
சிற்றுளியின் நடனம் – இது
சிற்பிக்கு பிடித்த முத்தம்
 
பரீட்சை எழுத வந்த மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்
எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்.. ..
படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
படிக்காத பக்கங்களை உன்னிடம்
ஆனாலும் நீ மாணவன் என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே .. ..
எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
புத்தகம் முழுமை பெற்று தனக்கான
ஆடை அணிந்திருக்கிறது....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...