காதலா காதலா காத்திருந்தேன் உன் கனிந்த முகம் காண
காலம் கடந்து கரைந்திட காணாது உன்னை தேடினேன்
காணாத் தூரத்து வான முகில் விலக்கி
காதல் கிளியே வந்தமர்ந்தாய் என் அருகே
காதலா காதலா காதலை களவாடு காலம் தாழ்த்தாதே
காத்திருந்து காத்திருந்து பூ விழியும் நோகுதடா
காணா இன்பம் கனிந்து சேர
காயம் ஆறி கானல் தீர
காதலா கனிவு செய்
முத்த மழை பொழிந்துவிடு...
காத்திருப்பின் காலம் எதுவரையோ அதுவரையும்
காயம் செய்யாது வனக் கிளியும் என் விழிகளை....
Kavignar Valvai
Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...