mercredi 25 novembre 2015

கற்பகத் தருவே சூரியத் தேவா வாழிய நீ ...



போற்றுதற்குரிய பொற் கதிரே... கற்பகத் தருவே சூரியத் தேவா ..
தமிழ் இனத்தின் விடியலுக்கே அன்பு ஒளி முகம் தந்த ஆதவன் நீ ..
கிழக்கு வானம் சிவக்கத்தானே அதிகாலை பிறக்கிறது
பிரபாகரா உன் விழி இரண்டும் சிவக்கச் சிவக்கத் தானே
தமிழின மரபுத் தோன்றல் தாய்மண்ணை காதல் கொண்டது
நவ கோல்களில் ஒன்றே ஒன்றுதான் சூரியன்
தரணியில் நீ ஒருவனே தமிழ் மாந்தரின் பிரபாகர பகலவன்

மறக்குலத் தோன்றலே மாவீரா அகவை இன்றுனக்கு அறுபத்தி ஒன்று
ஆதவனே உன் ஒளியே தமிழ் மாந்தரின் தேசியக் கீற்று ....
கண்ணியத்தின் காவலனே  காண்பதற்க் அரிய பேரொளியே
அஞ்ஞாத வாசம் மறந்தறியாய்  வனவாசம் தனிலும்
வரைமுறை வழுவாது எமை ஆண்டாய்
உயிருக்கு உயிர் தந்த உத்தமர் உயிர் நினைந்தே
உபவாசமும் நீ கொள்வாய் ....
விழித் தீயாலே தீபம் ஏற்றி  இடர் எனும் துயர் அகற்றி
விடியலின் தடை கற்கள் அகற்றி தமிழ் குல கடவுளானாவன் நீ

தேசியம் தழைக்க நின்று எமை ஆண்ட தேவனே
உன் தரிசனமே எமது பொற்காலம்
நீ தந்த வெற்றி வாகைகளே தமிழர் நாம் சூடிக் கொண்ட கிரீடம்
புதிய வார்ப்புகளை புரட்சித் தீ எழுச்சியில் வார்த்தவன் நீ
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி
கோயிலில் இல்லாத் தெய்வம் நீ.. தேய் பிறை இல்லா தமிழ் வானம் நீ..
காலத்தை வென்ற கரிகாலனே ஞாலம் எமக்கு ஒரு வாழ்வு தர
உயர் வாழ்வானவனே ....
சூடித் தந்த சுடரோனே சுயம்புவே வாழிய வாழியவே நீ  .....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...