lundi 20 avril 2015

எக்கரை இனி நான் ஏறுவேன் ...


இன்ப இழை படகு வீட்டில்
அந்த நிலா வராத போதும்
ஒளிமயம் கண்டேனடி
வல்லினம் மெல்லினமாய்
உற்ற இடையினம் எனும்
மூன்றுடன்  நீ வந்தவேளை!
 
சொல்லாட்சி தந்து நல்லாட்சி கொண்டவளே
வலம் சுற்றும் விழியிரண்டும்
மெல்லாசை கொண்டதென்ன
அன்புள்ள ஆணையில் அணை உடைத்து
துடுப்பில்லா ஓடம் ஆனேன்
எக்கரை இனி நான் ஏறுவேன் என்னவளே
எங்கே அழைத்துப் போகிறாய் என்னை நீ
கரை ஏறவேண்டும் கண்களை மூடிவிடாதே
உன் விழியே நான் காணும் கலங்கரை விளக்கு.....
Kavignar Valvai Suyen

8 commentaires:

  1. கரை ஏறவேண்டும் கண்களை மூடிவிடாதே
    உன் விழியே நான் காணும் கலங்கரை விளக்கு... kaathal...kaathal.....makilchy...

    RépondreSupprimer
    Réponses
    1. காதல் விழியின் கலங்கரை விளக்கில்லையேல் இவ்வுலகில் யாவும் மகிழ்ச்சியற்ற துயரே அன்புளம் தந்தீர்கள் சகோதரி வேதா நன்றி...

      Supprimer
  2. அருமை அண்ணா
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையெனும் வாழ்த்துரைத்து அகமலர்ச்சியோடு வாழ்த்துகள் தந்தீர்கள் சகோதரி துஷ்யந்தி உங்கள் அன்புக்கு நன்றி...

      Supprimer
  3. அருமை அண்ணா
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையெனும் வாழ்த்துரைத்து அகமலர்ச்சியோடு வாழ்த்துகள் தந்தீர்கள் சகோதரி துஷ்யந்தி உங்கள் அன்புக்கு நன்றி...

      Supprimer
  4. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையென வாழ்த்துரைத்து அன்பு தந்தீரகள் தனபாலன் மகிழ்ச்சி..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...