jeudi 30 mai 2019

மாணவன் நீ !!!


மகரந்தக் கூடல் நடுவே வண்டுகளின் நடனம்
பூக்களுக்கு பிடித்த முத்தம்

கலைக் கூடத்தில் சிற்றுளியின் நடனம்
சிற்பிக்கு பிடித்த முத்தம்

பரீட்சை எழுதும் மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்
எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்

படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
பக்கங்கள் எத்தனை படித்திடல்லாம்
ஆனாலும் மாணவன் நீ
என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே

எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
முழுமை பெற்று ஆடை அணிந்திருக்கிறேன்
கற்பு என் காப்பகம் பொது உடமை அல்ல

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...