பொய்யிலே புனைந்த வாழ்வு
மெய் அன்பிலே நீறாச்சு
பொய்யும் மெய்யும் புலர்விருக்க
புடம் போட்டே மின்னுகிறது தங்கம்
மெய் அன்பிலே நீறாச்சு
பொய்யும் மெய்யும் புலர்விருக்க
புடம் போட்டே மின்னுகிறது தங்கம்
பாவை என் முகம் பார்த்து
பால் நிலா ஒளிந்திருக்க
பார்த்தவன் மூடன்
பகலில் விளக்கெடுத்து வருகின்றான்
பால் நிலா ஒளிந்திருக்க
பார்த்தவன் மூடன்
பகலில் விளக்கெடுத்து வருகின்றான்
பாலுக்கும் கள்ளுக்கும் பேதம்
புரியவில்லை
யாரை நோவேன் யார்க் கெடுத்துரைப்பேன்
நதி வழி சென்றே நாணல் ஆனேன்
பெண்ணுக் கழகு நாணம் என்றே
பேதமை செய்கின்றார்
பேதை என் செய்வேன்
யாரை நோவேன் யார்க் கெடுத்துரைப்பேன்
நதி வழி சென்றே நாணல் ஆனேன்
பெண்ணுக் கழகு நாணம் என்றே
பேதமை செய்கின்றார்
பேதை என் செய்வேன்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...