சாலையிலே சோலைக் குயில் கூவுதம்மா குவுதம்மா
தாளாத சோகம் தனில் மூழ்குதம்மா மாழுதம்மா
செஞ்சோலை வாழ்ந்த குயில்
செய்ததென்ன குற்றம் அம்மா
ஆதரிப்பார் யாரும் இல்லை
அன்பு செய்ய நேசம் இல்லை
ஊருக்குள்ளே ஓடுதிங்கே
இதன் ஓசை நதி
ஓடக்கரை கால்வாயிலே ஜீவ நதி
போர் முடிந்தால் வாழ்வு வரும்
வசந்தம் எமை தேடி வரும் என்றீரே
வீரம் வீழ்ந்து மாண்ட பின்னே
மண்ணிலொரு இறைவனை
இன்னும் நாம் காணலையே
வசந்தம் கொல்லும் வாடைதானே
வடக்கில் வந்து வீசுதம்மா
உதயம் தந்த சூரியனால்
கிழக்கில் ஒளி இல்லையம்மா
ஏர் பிடித்த நாளை எண்ணி
எத்தனை நாள் வாழ்வதிங்கே
வரப்புயர வாழ்வெனும்
சின்னவரே மன்னவரே
மனசிருந்தா மார்க்கம் உண்டு
வீதி வாழ் குயில்களுக்கு
வேடம் தாங்கல் தாருங்களேன்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...