mardi 2 juillet 2019

சயன மாளிகை !!!


 அழகே உன்னை எழுதும் மனசை 
இமைகளின் இறகுகள் வென்றதடி
அன்பு முத்திரை பதித்து பகிர்ந்திட
எழுதும் கோல் எழுதிய தென்ன 

சந்தங்கள் எழுந்தன சங்கீதம் கேட்கவில்லை 
சுரங்கள் பிறந்தன புல்லாங்குழல் ஓயவில்லை 
சயன அறை சங்கீதத்தில் 
சாரீர ஊஞ்சலில்
நடு ராத்திரி நகலாச்சு 
புலர்வின் ஒலியில் கதிரவன் எழுந்தாச்சு

முடிந்தது சிவராத்திரி ஒன்றுதானே
நவராத்திரி ஒன்பது இரவுகள்
ஒன்றின் பின் ஒன்றாய் 
கண் சிமிட்டி அழைக்கும் போதில்
இமைகளின் இறகால் மை எடுத்து வா
அழகுச் செல்வம் வரைவோம் அப்போ 
சயன மாளிகை திறக்கும் கதவு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...