mercredi 17 juillet 2019

அன்பும் அற நெறியும் !!!


அறிவுக்கு வேலை கொடு - அன்றேல்
அறியாமை உன்னை தின்னும்
அறியாமையின் ஆணிவேர் எங்கே என தேடினேன்
அது நான்தான் என கண்டு வெக்கித்துப் போனேன்

எண்ணக் கருக்கள் என் சிந்தனையில்
எங்கெங்கோ முளைத்திருந்தன
அதை அள்ளிப் பெருக்காது விட்டதினால்
தூர் வாரா நீர் குவளையத்தில் துர் நாற்றம் வீசிட
எத்தனையோ வெடிப்புக்கள் எனக்குள்ளே

மூளைச் சலவை அவசியம் என்கிறார் மருத்துவர்
சொட்டு நீலம் போட்டுத் துவைத்தால்
மின்னல் அடிக்கும் வெண்யாகும் என்கிறார்கள்
அமிலம் நிறைந்த அலம்பலான மூளையை
இனி என்ன போட்டு துவைத் தெடுப்பேன்

ஆயிரம் கோயில் சாமிக்கு இருந்தும்
அவனை நேரில் காணவில்லை
இரங்கல் மனு எழுதிப் போட்டேன், இறைவனுக்கு
இத்தனை காலம் எங்கிருந்தாய் என
எழுதிவிட்டான் என் மனுவுக்கு

மந்திரமான சுந்தரர் நீறெடுத்து
மங்கலக் குங்குமம் சேர்த்து குளைத்து
அமிலம் கொண்ட அங்கம் எல்லாம்
சிந்தை குளிர சிவாய நம என
எழுதினேன்
அபாயம் இனி இல்லை என
ஆட்கொண்டான் இறை என்னை

அறிவும் ஆற்றலும் அரு மருந்தல்ல
அது அள்ளக் குறையா களஞ்சியமே
அற்பணிப்புக்கள் இல்லையேல்
அன்பும் அற நெறியும் உரித்தாவதில்லை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...