vendredi 20 décembre 2019

அழியுமா.. அழியாதா.. உலகு !!!

அழியுமா.. அழியாதா.. உலகு !!! 
21.12.2012

நூறு கோடி வயசடா மனிதா 
இந்த பிரபஞ்ச பூமிக்கு 

அதை ஆளப் பிறந்து ஆளும் நீ 
உலகை கண்டு 
நான்கு லெட்சம் ஆண்டுகளே 
உன்னை உலகே அறியும்

உலக உயிர் அழியுமா...  அழியாதா… 
உனக்குள்ளே அச்சம் மிகு கேழ்வி  

மாயன் எழுதி வைத்தான் அச்சரச் சுவடி
அழியும் உலகென்று 21.12.2012ல்
அகழ்ந்தறிந்தான் அறிவாளி
இதில் எவன்தான் ஞானி
இன்னும் இவ்வுலகு
தன்னுயிரை 
ஈகம் செய்யவில்லை

பூமியை, தின்னும் இன்னொரு பூகோளம்
பூமிக்கருகில் கண்டாயா சொல்
பூமி, தன்னைதானே தின்டு செரித்தாலும்
கோடிகாலம் வேண்டுமே ஜீரணிக்க

சினையுற்ற மணல் நண்டு 
ஒரு நாளும் அழுவதில்லை
தனக்காக 

வாய் இருந்தும் மொழி பேசா பசுவாய் 
நீதி கேழ் வாய்மை காக்கும் உலகு
சினம் தணிந்து மனம் துணிந்து நட
நாலும் தெரிந்தாலும் 
நடக்கப்போவது தெரிவதில்லை நக்கு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...