lundi 16 décembre 2019

இதய ஒலி கேக்கிறதா !!!


ஒளி ஏந்தி வந்துள்ளீர்கள் எமதுறவே 
விழி நீர் சிந்தாதீர்கள் விடியலுக்காகாது

பாச நேசங்களை பற்றறுத்து 
பாதியில் போகவில்லை நாங்கள்
உமக்காகவே போராடினோம் 
உதிரம் சிந்தினோம் 
உயிரையும் தந்துவிட்டோம் 
உளமாற மகிழ்கின்றோம் 
உங்களை பிரியவில்லை

இன்னும் விடியவில்லை இடர் காட்டில் நீங்கள்
முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி அல்ல
விடியல் வென்றால் வந்தெமை எழுப்புங்கள் 
தாய் மடியில் கொஞ்சம் இளைப்பாறுகின்றோம் 
தாலாட்டுகிறாள் எங்களை தமிழீழத் தாய்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...