mardi 4 avril 2017

அழகான அந்த ஆலமரம் !!!

மண்பற்று மிகுந்த மனம் - விண்
தொட்டே உயர்ந்த குணம்
ஊர் நடுவே உந்தன் நிழலில்
உறவின் சங்கமம்
உலைக் களமும் கலைக் களமும்
உந்தன் நிழலிலே உரிமைச் சங்கமம்

ஊருக்கு உறு துணையாய் நீ இருக்க
கோடரி வீசி உன்னை அறுத்தும்
வீழாது மாழாது விழுதுகளில் வாழ்கிறாய்
மானக் குடை உனது வீரக் கிளை

குலம் வாழணும் மனை வாழணும்
ஊர்கூடி வாழ்ந்த இனம்
உரிமைக் கோலோச்சி
தாய் மண்ணில் ஏர் உழணும்
உரம் இட்டு ஏற்றம் இறைக்கின்றேன்
வேர் அறுத்தவர் குலம் நீறாகட்டும்
புலர் வேளை புள்ளினங்களோடு
புனர் ஜென்மம் காண்போம் எழு

ஆலும் வேலும் விட்டகலாது
உறவின் சங்கமம்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...