mardi 25 avril 2017

ஒற்றை ஆணியில் வண்ணப் படங்கள் !!!

இனியவனே இறந்த காலக் கண்ணாடிச் சுவற்றில்

உடைந்து உருக்கி வார்த்த சிலைகள் நாங்கள்

நீ இருந்தால் என்னோடு

எதிர்காலம் உறவோடு

நிகழ் காலம் எம்மை சிதைத்துச் சிரித்தாலும்

வாழ்ந்தே வான் உயர்வோம் அன்போடு

என்னவனும் உன்னவளும் செந்தூர மேகமாய்

துயர் தூவி தூரம் சென்றாலும்...


ஒற்றை ஆணியில் வண்ணப் படங்களாய்

நம் கூட்டுச் சுவர்களில் வெள்ளை அடித்து

அவர் தம் நினைவாலே வாழ்த் தெழுதி

வாழ்வுயர ஆசி மலர் தூவுகிறார்...

உன் பிள்ளை என் பிள்ளை

இனி என்றும் நம் பிள்ளை

சந்ததி வாழ சந்தோசம் காண்போம் வா

தென்ரல் தீண்டும் இளமை விட்டு

இன்னும் உடல் சாயவில்லை


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...