lundi 10 avril 2017

என்னை மறந்தேன் இனிதே மெல்ல !!

சொர்க்கத்தை வெல்ல வல்ல மௌன மொழியும்
தோற்றது உன்னிடத்தில் எங்கள் செல்லமே
உன் கொஞ்சும் தமிழ் வாய் மொழி கேட்டு
என்னை மறந்தேன் இனிதே மெல்ல
உள்ளக் கதவுக்குள் ஒளிந்துகொண்டு
மூன்று தமிழ் கோர்த்து முகவுரை தருகின்றாய் நீ
போதும் போதும் எங்கள் பூ மலரே
வாழையடி வாழையென வந்த வம்ச விளக்கே
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு வானுயர் செழிப்போடு
நலம் யாவும் உன் கை கோர்த்து நடக்குமே நூறாண்டு       

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...