vendredi 28 avril 2017

தங்கம் வாங்கும் என் செல்லம்மா !!!


ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து சேர்த்த பணம் என் செல்லம்மா

நீ சேமித்துச் செழிப்புற வாங்கி வையேன் தங்கம் தப்பில்லே

சேதாரம் இல்லையடி ஆதாரம்தான் அது அழிவே இல்லே  

வறுமை வந்துன் திண்ணையில் தூங்கினால்

கலங்காதே கண்ணே விற்றேனும் வாங்கிடுவாய்

வாழ்வும் வளமும்



அட்சய திதியன்று தங்கம் வாங்கி சேர்த்து வைச்சா

ஊருக்குள்ளே உயர்வாயென ஊரே சொன்னாலும்

உன் புத்தி எங்கே போச்சு

வட்டிக்கு பணம் எடுத்து வாங்கி வந்த தங்கம் தானே

பெட்டியிலே செல்லரித்து உறங்கிதடி

பெட்டியிலே உள்ள தங்கம் குட்டி ஒண்ணும் போடலையே

வறுமை வந்து வாசலிலே வைராக்கியம் கொள்ளுதேடி

குசேலன் வீட்டுக் கூரை காண வாறாங்க ஊரவங்க

வாங்கி வைச்ச நகையாலே வாழ்க்கை இப்போ நாசமாச்சு

நிமிர்ந்து பாரேன் மேலே கொஞ்சம்

குசேலன் வீட்டுக் கூரை இப்போ நம்ம தலைமேலே



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...