mercredi 20 décembre 2017

அருந்ததி அறியேன் ...

நெஞ்சம் அள்ளும் நீரலையும் கானமழை பொழியும்
ஆசையிலே நனைந்தால் நெஞ்சுக்குள்ளே சிலிற்கும்
ஓர விழிச் சிற்பமே எனை நீ சிதைச்சே
சிற்பி தந்த பொற் சிலையே
சிந்தனைய கலைச்சே

அடை மழை காலம் அருந்ததி அறியேன்
இருட்டினில் தானே பெட்டகம் திறந்தேன்
விரல்களினாலே விழிகளை மறைத்தே
தொடத் தொடத்தானே
நனையிறேன் நானும்
தனிமரம் கண்டு தழிரினை நனைத்து
புது மலரென்னை கிள்ளி பார்க்கிறாய்
காமன் அறைக்கே கோலம் இடுகிறாய்
ஏடகத்தின் வாசல் எனை மறித்தாலும்
உன் மடல் போதும் கம்பனை காண்பேன்

விடி வான வெள்ளி விழித்திட்ட போதும்
அடி வான ஒளிக்கு இருள் தூவி மறைப்பேன்
இமை காவல் உடைத்தே உயிராவேன்
உன் உள்ளக் கோட்டையில் தினம் வாழ்வேன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...