vendredi 24 novembre 2017

என்னை மன்னித்துவிடு 🌷

அழகே உன்னெழில் காணத்தானே
புத்தகத்தில் குடி வைத்தேன்
மாதங்கள் வருடங்களாகிட
மனப்பால் குடித்திருந்தேன்...
முலை ஊட்டிகளே
குட்டி போடும் என்றார்
ஆசிரியர்!

உன் வண்ணம் கண்டே
ஆசை கொண்டேன்
மயிலே மயிலே
என்னை மன்னித்துவிடு
எண்ண இறகை உதிர்த்து
உன் வண்ண இறகை
உன்னிடமே தந்துவிட்டேன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...