ஆசைத் தூறலே சாரலாய் வீசி
என்னை நனைத்துவிட்டாய்
நீராடை மேல் மின்னிய சூரிய ஒளியை
வைர முத்துக்களென ஆசை தீர அள்ளி
அனர்த்தம் கண்டேன்!
என்னை கண்ட ,
கொடி இடை வளைந்த தாமரையாள்
வானுயர்ந்த தன் ஆதவனிடத்தில்
யாடை மொழியில் ஏதேதோ சொல்லி
என்னை கேலி செய்துவிட்டாள்
அள்ளிய வைரங்களை அப்படியே
போட்டுவிட்டேன்..!
பூவுலகை காணவந்து
புழுதியிலே வீழ்ந்ததினால்
குடைக்குள் ஒதுங்க எண்ணம் இன்றி
மாசு தனை கழுவிப் போகிறேன்
தொடாதே என்னை நீ தாங்காது வெண் மனசு...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...