mercredi 11 décembre 2013

நான் அழைத்தால் வருவாள் என் அம்மா..


கருவறைக் காலக் கார் மேகம் - மீண்டும்
வராதா என இறைவனை கேட்டேன்
ஒரு முறைதானே
அந்த அரு மறை வரம் என்றே
இறைவனும் சொல்லிவிட்டான்

 நான் அழுதால்  வருவாள் என் அம்மா
பசியில் அழுதேன் நோயில் அழுதேன்
இடரில் அழுதேன் துயரில் அழுதேன்
நீ வரவில்லையே இறைவா..
என் விழி நீர் துடைத்து
என்னை ஆட்கொள்ள
அவள்தானே வந்தாள்

 நான் அழைத்தால் வருவாள்
என் அம்மா
எனக்குத் தெரியும்
இது உனக்குப் புரியாது
இறைவா நீ அன்னை இல்லாதவன்
அம்மா.. அம்மா... அழைக்கிறேன்
உன் பிள்ளை, வந்துவிடு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...