mardi 17 décembre 2013

தேசக் குரலோன்..


பேரினச் சிங்களம் தமிழர் மேல் அள்ளி இட்ட தீ..
பூவென்றும் பிஞ்சென்றும் கிளம் என்றும் பாராமல்
அள்ளி உண்ணும் போதில்
விதியென வீழாது வெகுண்டெழுந்த
வீர வேங்கையே...

எம்மின வாழ்வியலின் ஏடேந்தி
இறையாண்மைக்கு உயிரூட்டி
விடிவான கதிர் ஏற்றி
திம்பு முதல் ஜெனிவா வரை
,நா மன்றுக்குள்ளும்
அடங்கா பற்றொடு அறம் எழுதி
வாதிட்ட தத்துவ ஞானியே
தேசியத் தலைவனின் அவைப் புலவன் நீ

தம்பியிடம் கேட்டேன் ஆயுதம் தாரும் என்று
தர மறுத்துவிட்டார் நான் மந்திரி என்று
புன்னகையாய் சொன்னீர் அண்ணா
மென் மலர் தூவி நின்றீர் அண்ணா
தேசக் குரலோனே உமது ஆழுமை சொற் புதிர்கள்
இன்றும் அகிலத்தை ஆட்டிவைத்துப் பார்க்குதண்ணா..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...