mardi 4 décembre 2018

அகவை காணும் அன்பு பாவலா வாழ்க நீ !!!


தமிழீழ தேசத்தின் ஆஸ்தான பாவலனே
விடிந்தும் விடியாத விடை இல்லா வாழ்வில்
மூழ்கி தவிக்கிறோம்

இருந்தும் இல்லாதாரும்
இல்லாது இருப்போரும்
அள்ளும் துயர் அலையில்
அனுதினமும்
வாழ்வாண வாழ்வு
வாழ்வோம் என்று
தேடும் விழிகளின் தேக்க நீர்
வற்றா ஜீவனொடு வறுமையில்

வழிமேல் விழி நோக்கி
பொறுமை சிலையாய்
பூகம்ப மலையாய்
அமைதி கடலில் மூழ்கி கிடக்கிறோம்

வா வா புலவா புதுவை இரத்தினமே
இன்றுன் பிறந்தநாள் காண்போம் இனிதாக
வா வா புலவா
ஆஸ்தான புலவா புதுவை இரத்தினதுரையே
வாழ்க தமிழ் வாழ்க வீரம்
வாழ்க நின் தமிழீழ பாக்கள்
வாழ்த்துகிறோம் வாழிய புலவா
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீ
எமதீழ அரசின் அவை புலவனே
என்றும் பதினாறே உனக்கு

03.12.2018
அன்புடன் - பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...