mardi 4 décembre 2018

மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விண் பூத்த ஒளியும் விடிவில்லா வாழ்வும்
காணாக் கண்கள் பனித் தொழுக       
அன்றாடம் வாசலிலே
அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்தார்
மண் மீட்பு போரிலே மாவீரர்கள்

எள்ளி நகை கொண்டே கொள்ளி இட்ட கொடும் பகையே
ஆண்ட இனம், மானம் இழந்து மண்டியிட்டு மாழுமோ
தன் தேசம் இழந்து தாழ் பணிந்து வீழுமோ
தமிழீழம் தலை சுமந்தான் மாவீரன் பிரபாகரன்
அவன் வழி நடந்து களம் காத்த
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!

விடுதலைத் தீ வேழ்வியிலே
விடிந்த ஈழம் நீ அறிவாயடா
விடுதலைக்கு கொடுத்த விலை
எம துயிரே விலை ஏதடா
தமிழ் பாலூட்டி வளர்த்தாள் தமிழீழத் தாயல்லவா
தன்மானச் சேலை கொடுத்தார் மாவீரர் இவரல்லவா

முன் ஆன்ட எம் அரசின் முடி வாழ் கண் சுமந்த புலி
இந் நாள் தனிலும் இலங்காபுரி ஈன்ற கொடி
கோட்டை கொத்தளம் வென்று அரசுரிமை ஆட்சி தந்து
வடக்கும் கிழக்கும் ஒருமையின் உயிர்க் கூடென்றார்

தாயகக் கனவை தினம் நினைந் தெழு மனமே
வஞ்சக வலை அறுத்து வாழ்வியல் வளம் தேடு
உன் தாய்த் திரு நாடு தமிழீழமே
வாகை சூடிடல்லாம் வென்றெழு தினமே
சுய உரிமை சுதந்திரம் இல்லையேல்
இறந்தவர் நீரே

மண் மீட்பு போரிலே தமிழீழம் மலருமடா
அன்றாடம் வாசலிலே அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்து அரசுரிமை தந்தார் மாவீரரே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...