dimanche 16 décembre 2018

ஓர விழி ஓவியம் சிரிக்கிரது !!

உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
நாயகன் நாயகி நீயே
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்
ஓவியம் சிரிக்கிறது

வாழ் நாள் இருப்பில் வாசனை உன்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை
எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்

வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்

உன்னை சுற்றி சிலந்தி வலை
சித்திரக் கோடுகளாய்
காணும் வரைதான் கனவுலகம்
நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும்
நீரில் நீந்தும் காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு எதற்கு
சாமிக்கும் சொல்லிவிடு
அனைத்தும் இங்கே நிர்வாணங்களே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...