lundi 10 décembre 2018

ஏட்டுச் சுவடி..

ஏட்டுச் சுவடிகளை விண்ணளாவி விழி திறந்தது கணணி
உயிர் எழுத்துக்களோடு உயிர் மெய் எழுத்துகளை
உறவில் வைத்தேன்
கிளவியர் யாடை புனைந்து தொடு என்றது தன்னை

கட்டுண்ட பஞ்சு விரல்கள் முத்தமிட்டு
மொழிக் காதலுற
மெமோறி அனுக்கள் மின் அலைகளில்
தன் காதலை சொல்லியது
என் காட் டிஸ்கில் இடம் இல்லை
அன்னை தந்தையின் காதல் கடன்
இன்னும் தீர்க்கப்படவில்லை
எப்படி இதயம் கொடுப்பேன்
என்னொருத்தியிடம் (என்னொருத்தனிடம்)

காசிருந்தால் வாங்கலாம் கனதி ஏற்றும் காட் டிஸ்க்
வாங்கிய பின் தருகிறேன் என்னிதயம்
உன் விழி ஒளி மிகு எக்கிறோணில்
வான வில்லின் வர்ணங்கள் தூவி
உன் முகத்தில் என் முகம் பதித்து
பிறிண்டர் எடுப்போம்
பிரதிப் பைலில் சேர்ப்போம்
அதுவரை பொறு மனமே
எதையும் தாங்கும் பூமி எம்மையும் தாங்கும்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...