vendredi 21 décembre 2018

வெண்டாமரை கன்னி !!!

பஞ்சணை தழுவி மெல்ல எழுப்பிணாள்
வெண்டாமரை கன்னி
அஞ்சினேன் அவளின் ஈரஞ்சு விரல்களும்
என்னில் அபுநயம் புரியக் கண்டு

எல்லை மீறி தேகம் எங்கும்
விழியால் வரைந்தாள் ஓவியங்கள்
பருவம் பட படக்க
இமைச் சிறகுகள் விண்ணளாவ
வியப்பும் விடையும் இன்றி
மூடிவிட்டேன் இமைச் சிறைக்குள்
இருளுக்குள்ளும்
அவளின் இங்கிதங்கள் குறையவில்லை

போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்கள்
விழி முனை ஈட்டியின் காயங்களில்
எச்சில் முத்தங்கள்
எதிரும் புதிரும் சமர் எதிர் கொண்டேன்
விளக் கொளியும் இல்லை விடியவும் இல்லை
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்

காளி அவதாரத்தை இன்றுதான் நேரில் கண்டேன்
அச்சம் களைந்து அன்பே என்றேன்
கனிந்து கனவா என்றாள்
மீன்டும் துயில் கொள்ளவில்லை
வெண்டாமரையாள்
இனியும் வேண்டாம் என்றே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...