dimanche 16 décembre 2018

வற்றா வாழ்விற்கு அவனே காப்பு !!!

சொல்லும் நா சொல்லும் அன்பில் மெய் அன்பிருந்தால்
மரங்களில் பூக்களன்றி மனங்களில் என்றோ பூத்திருக்கும்

சொல்லில் வல்லோர் சொல்லும் அன்பில்
கொஞ்சும் வஞ்சம் நஞ்சில் கொஞ்சம்
நலிந்தே நா உதிர்த்திடினும்
நற் துணையாகும் நமச்சிவாயம்

வெண் பூ கொண்டு வெண் மன தேற்றிடினும்
தோற்றுவார் தோற்றி எள்ளிநகை கொண்டே
உள்ளக நஞ்சை கொட்டி நலிந்திட செய்வார்   
அஞ்சே லெனும் ஆத்மா உருக
பொருந்தக் கை தொழுதேனும்
இதயத்துள் கோயில் கட்டி
இறைவனை குடி இருத்து
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு
மலையளவே வரும் துயரும் தினையளவே ஆகும்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...