mardi 10 mars 2015

கலையாதே கனவே ஏழைக்கும் நீ சொந்தம்....


சந்திக்காத சந்ததியாய் காசும் மனசும்
பொழுது விடிந்தாலும் விடியாத
போக்கத்த பிழைப்பாய்
எழையை கண்டதும் கண்ணீர் வடிக்கிறது 
அறிவுக் களஞ்சியச் சாலைகளின், கதவுகள்...
 
கல்வியே கண்ணெனும் களஞ்சிய விளக்கு
ஏழைக்கு எட்டா இருளாவதோ
தாயெனும் சுமைதாங்கி
சகதிக் குழாய் வாழ்விருந்து
தலை சீவி பொட்டுட்டு
பள்ளிக்கு போ என்கிறாள் பிள்ளையை
 
களஞ்சிய விளக்கின் ஒளியிருப்பு
நாளை இவளது சினேகமனால்
இவள் வாழ்ந்த இருள்ச் சாலைகளில்
தெருக் கம்ப விளக்கெழுந்து
நிலாக் காலம் தரும்
சேரி ஓரச் செந்தாமரைகள் சகதி விட்டு
செங்கோட்டு வீட்டில் நிழல் கொள்ளும்
இல்லார்க்கு இல்லை எனும் நிலை இல்லாது
அனைத்தும் அரச கொடுப்பாய் ,
அங்குரார்ப் பணம் செய்வாள் இந்த மாதரசி.
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...