mardi 29 janvier 2019

மனம் கொண்ட மாளிகை !!!

ஒரு கூட்டு குயிலாக என் வீட்டு கிள்ளைகள்
பாடு காணம் பாடு உயர் கால உறு துணை தேடு
தேசங்கள் கடந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும்
ஆநந்த வாழ்விற்கே அலைமோது 
சுக வாழ்வு காண கூடு
சுதந்திரம் நிலை கொண்டு வாழு

மண் குடில் கூரைக்குள் மனம் கொண்ட மாளிகை
மாறா புயுல் கூடி மண் வீட்டை கரைத்தாலும்
புன்னகை பூ உதிராது பூவின் வாசம் தீராது
வாய்மை ஒன்றே வாழ்வுக்கு துணை
வசந்தங்கள் தேடி ஓடு

வானம் பொய்க்காது மழை வந்து தூறும்
வசந்தங்கள் வந்துன்னை தாலாட்டும்
ஒளித் தீபங்கள் துணை நின்றே வாழ்த்தும்
வையகம் வளைவுதான் வையாதே பொய்யென்று
கானகம் இருண்டாலும் கதிரவன் வருவான் நாளை
வறுமை சிருமை என கண்ணீர் சிந்தாதே
உயர்வான வாழ்வென்றும் உம்மோடுதான்
பாடு காணம் பாடு உயர் கால உறுதுணை தேடு

பாவலர் வல்வை சுயேன்

mercredi 23 janvier 2019

அரசனும் ஆண்டியே !!!

ஊர் அற வேர் அற வேண்டா உறவெனில்
அரசனும் ஆண்டியே அம்பலத்தில் 
நான் நான் எனும் மமதை நாணமுற
அனுங்குகிறாள் சினுங்குகிறாள்
உனக்குள்ளே ஒருத்தி !
அடம்பன் கொடியென மிடுக்கெனத் திரண்டே
தீவினை அற தீன்டும் விசமும் கொல்
தாழா நிறைவு காணும் தாயகம் தன்னுயர்வு

பாவலர் வல்வை சுயேன்

jeudi 10 janvier 2019

அனுங்குகிறாள் அன்னைத் தமிழ் !!!

கலையோ சிலையோ கற்பனையோ
ஆதி சக்தி அன்னையென
அருளும் கொலுவிருக்க
சிற்றின்ப சிறகிலே சிற்பமோ

கல்லிலும் காமத்துப்பால்
சொல்லிலும் காமத்துப்பால்
கைவளை ஓசையிலும் காமத்துப்பால்
முப்பாலும் தரும் மூன்று தமிழாலே
முப்பிறவிதனிலும் மூண்ட பயனும் கொல்
இப்பிறவியொடு இனி எப்பிறவியும் வேண்டாதே
நின் நீச மிகையாலே நீர் விழி சொரிகிறாள்
அன்னைத் தமிழ் உன்னை ஏன் பெற்றேனென்று

பாவலர் வல்வை சுயேன்

dimanche 6 janvier 2019

காணவில்லை தேடுகிறேன் !!!

காதலின் உயிர் செழுமை
தேடலில் கிடைக்காத
மலர் வனச் சிரிப்பு
ஏதோ ஒன்று
இருவருக்கும் இடையில்
என்னென்பேன்

எடுத்துச் சொல்ல முடியவில்லை
கூட்டை விட்டு உயிர் தனியானதேன்
அறியேன் உயிரே
உள்ளம் பாவம்
கொடுத்துவிடு என் ஜீவனை

நிலையுரு தாழா நிழலாய் தொடர்ந்தேன்
கூட்டத்தில் துலைத்துவிட்டேன்
துணையே துணை இன்றி இருள்கிறது
புலர்வில்
பூவே உன் முகம் காட்டு
மறு ஜென்மம் எடுத்து
மறுபடியும் காண வருவேன்
அன்பிருந்தால் அன்றேனும் கொடு
உன் நினைவோடு வாழ்வேன் நான்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 23 décembre 2018

உன்னை நீ எழுது !!!

வாழ்க்கை வாழ்ந்து பார்க்கவே
வந்து போகும் வாலிபம் முதுமை
நோயில் வீழ்ந்து
நொடியிலும் போவோம்
பாயில் உளன்று பாடை அழைக்க
பாசம் அறுத்து மோசம் போவோம்
இன்பம் துன்பம் இரண்டும் வென்றே
இருக்கும் காலம் உன் பெயர் எழுது
கல்லில் எழுத்தானால்
கரையாது உன் வாழ்வு
கால காலத்திலும்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 21 décembre 2018

வெண்டாமரை கன்னி !!!

பஞ்சணை தழுவி மெல்ல எழுப்பிணாள்
வெண்டாமரை கன்னி
அஞ்சினேன் அவளின் ஈரஞ்சு விரல்களும்
என்னில் அபுநயம் புரியக் கண்டு

எல்லை மீறி தேகம் எங்கும்
விழியால் வரைந்தாள் ஓவியங்கள்
பருவம் பட படக்க
இமைச் சிறகுகள் விண்ணளாவ
வியப்பும் விடையும் இன்றி
மூடிவிட்டேன் இமைச் சிறைக்குள்
இருளுக்குள்ளும்
அவளின் இங்கிதங்கள் குறையவில்லை

போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்கள்
விழி முனை ஈட்டியின் காயங்களில்
எச்சில் முத்தங்கள்
எதிரும் புதிரும் சமர் எதிர் கொண்டேன்
விளக் கொளியும் இல்லை விடியவும் இல்லை
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்

காளி அவதாரத்தை இன்றுதான் நேரில் கண்டேன்
அச்சம் களைந்து அன்பே என்றேன்
கனிந்து கனவா என்றாள்
மீன்டும் துயில் கொள்ளவில்லை
வெண்டாமரையாள்
இனியும் வேண்டாம் என்றே

பாவலர் வல்வை சுயேன்

dimanche 16 décembre 2018

வற்றா வாழ்விற்கு அவனே காப்பு !!!

சொல்லும் நா சொல்லும் அன்பில் மெய் அன்பிருந்தால்
மரங்களில் பூக்களன்றி மனங்களில் என்றோ பூத்திருக்கும்

சொல்லில் வல்லோர் சொல்லும் அன்பில்
கொஞ்சும் வஞ்சம் நஞ்சில் கொஞ்சம்
நலிந்தே நா உதிர்த்திடினும்
நற் துணையாகும் நமச்சிவாயம்

வெண் பூ கொண்டு வெண் மன தேற்றிடினும்
தோற்றுவார் தோற்றி எள்ளிநகை கொண்டே
உள்ளக நஞ்சை கொட்டி நலிந்திட செய்வார்   
அஞ்சே லெனும் ஆத்மா உருக
பொருந்தக் கை தொழுதேனும்
இதயத்துள் கோயில் கட்டி
இறைவனை குடி இருத்து
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு
மலையளவே வரும் துயரும் தினையளவே ஆகும்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...