dimanche 6 janvier 2019

காணவில்லை தேடுகிறேன் !!!

காதலின் உயிர் செழுமை
தேடலில் கிடைக்காத
மலர் வனச் சிரிப்பு
ஏதோ ஒன்று
இருவருக்கும் இடையில்
என்னென்பேன்

எடுத்துச் சொல்ல முடியவில்லை
கூட்டை விட்டு உயிர் தனியானதேன்
அறியேன் உயிரே
உள்ளம் பாவம்
கொடுத்துவிடு என் ஜீவனை

நிலையுரு தாழா நிழலாய் தொடர்ந்தேன்
கூட்டத்தில் துலைத்துவிட்டேன்
துணையே துணை இன்றி இருள்கிறது
புலர்வில்
பூவே உன் முகம் காட்டு
மறு ஜென்மம் எடுத்து
மறுபடியும் காண வருவேன்
அன்பிருந்தால் அன்றேனும் கொடு
உன் நினைவோடு வாழ்வேன் நான்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...