mardi 29 janvier 2019

மனம் கொண்ட மாளிகை !!!

ஒரு கூட்டு குயிலாக என் வீட்டு கிள்ளைகள்
பாடு காணம் பாடு உயர் கால உறு துணை தேடு
தேசங்கள் கடந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும்
ஆநந்த வாழ்விற்கே அலைமோது 
சுக வாழ்வு காண கூடு
சுதந்திரம் நிலை கொண்டு வாழு

மண் குடில் கூரைக்குள் மனம் கொண்ட மாளிகை
மாறா புயுல் கூடி மண் வீட்டை கரைத்தாலும்
புன்னகை பூ உதிராது பூவின் வாசம் தீராது
வாய்மை ஒன்றே வாழ்வுக்கு துணை
வசந்தங்கள் தேடி ஓடு

வானம் பொய்க்காது மழை வந்து தூறும்
வசந்தங்கள் வந்துன்னை தாலாட்டும்
ஒளித் தீபங்கள் துணை நின்றே வாழ்த்தும்
வையகம் வளைவுதான் வையாதே பொய்யென்று
கானகம் இருண்டாலும் கதிரவன் வருவான் நாளை
வறுமை சிருமை என கண்ணீர் சிந்தாதே
உயர்வான வாழ்வென்றும் உம்மோடுதான்
பாடு காணம் பாடு உயர் கால உறுதுணை தேடு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...