உழைப்போர் உலகம்
மலரட்டும்
உரிமை வாசம் வீசட்டும்
சரி நிகர் சம நிலை தாழ்வின்றி
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்
சுறண்டும் வர்க்கம் சுறண்டிச் சுறண்டி
உறிஞ்சுது தோழா உன் குருதி
வீழ்ந்தே கிடந்து அடி தொழுது
அழிந்தே போவதோ மனு நீதி
வானம் பெய்யும் மழை என்று
வறண்ட நிலமாய் கிடவாதே
உழைப்போர் உரிமை உயிர் நாடி
அதை அள்ளித் தின்பதோ பெருச்சாளி
குனிந்து குனிந்து கூனிய முதுகின்
முள்ளந் தண்டே கேழ்விக்குறி
அடிமைத் தழையோ ஆலிலைச் சருகோ
ஆலின் விழுதே நீதானடா
தினைப்புனம் காணா வனக் குயிலும்
உரிமைக் குரலை எழுப்புதடா
அஞ்சிக் கிடக்கும் ஆதவரே
அகிலம் அதிர எழுந்தே நடமிடு
தாழ்ந்தவர் உண்டோ தரணியிலே
உரிமை பெற்றுட உயிர் கொண்டுவா
பாவலர் வல்வை சுயேன்
01.05.2013
உரிமை வாசம் வீசட்டும்
சரி நிகர் சம நிலை தாழ்வின்றி
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்
சுறண்டும் வர்க்கம் சுறண்டிச் சுறண்டி
உறிஞ்சுது தோழா உன் குருதி
வீழ்ந்தே கிடந்து அடி தொழுது
அழிந்தே போவதோ மனு நீதி
வானம் பெய்யும் மழை என்று
வறண்ட நிலமாய் கிடவாதே
உழைப்போர் உரிமை உயிர் நாடி
அதை அள்ளித் தின்பதோ பெருச்சாளி
குனிந்து குனிந்து கூனிய முதுகின்
முள்ளந் தண்டே கேழ்விக்குறி
அடிமைத் தழையோ ஆலிலைச் சருகோ
ஆலின் விழுதே நீதானடா
தினைப்புனம் காணா வனக் குயிலும்
உரிமைக் குரலை எழுப்புதடா
அஞ்சிக் கிடக்கும் ஆதவரே
அகிலம் அதிர எழுந்தே நடமிடு
தாழ்ந்தவர் உண்டோ தரணியிலே
உரிமை பெற்றுட உயிர் கொண்டுவா
பாவலர் வல்வை சுயேன்
01.05.2013
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...