jeudi 30 avril 2020

உழைப்பாளர் தினம் !!!

உழைப்போர் உலகம் மலரட்டும்
உரிமை வாசம் வீசட்டும்
சரி நிகர் சம நிலை தாழ்வின்றி
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்

சுறண்டும் வர்க்கம் சுறண்டிச் சுறண்டி
உறிஞ்சுது தோழா உன் குருதி
வீழ்ந்தே கிடந்து அடி தொழுது
அழிந்தே போவதோ மனு நீதி

வானம் பெய்யும் மழை என்று
வறண்ட நிலமாய் கிடவாதே
உழைப்போர் உரிமை உயிர் நாடி
அதை அள்ளித் தின்பதோ பெருச்சாளி
குனிந்து குனிந்து கூனிய முதுகின்
முள்ளந் தண்டே கேழ்விக்குறி

அடிமைத் தழையோ ஆலிலைச் சருகோ
ஆலின் விழுதே நீதானடா
தினைப்புனம் காணா வனக் குயிலும்
உரிமைக் குரலை எழுப்புதடா

அஞ்சிக் கிடக்கும் ஆதவரே
அகிலம் அதிர எழுந்தே நடமிடு
தாழ்ந்தவர் உண்டோ தரணியிலே
உரிமை பெற்றுட உயிர் கொண்டுவா

பாவலர் வல்வை சுயேன்
01.05.2013

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...