செல் போன் மணியில் றிங்டோண் சொப்பனமே
அதில் பேசும் கிளி மொழி நீ மலர்வனமே
செம்பவளம் அள்ளவா செங்குளத்தில் குளிக்கவா
முல்லை மஞ்சத்தில் பொன்னுலகம் காண்போமா
அந்தி வெயில் சாயுதடி சந்தணமும் வீசுதடி
கோவில் மணி ஓசையிலே பூங்காற்றாய் தழுவுகிறாய்
செவ்வாழை குருத்தே செம்பருத்தி பூவே
மாங்குயிலும் பூங்குயிலும் வெள்ளி நிலா காணுதடி
சொல்லாத சேதி சொல்லு செல் போனில் நீதானே
சொக்கி நிக்கிறேன் சொன்ன சேதி இனிக்கிதடி
ஆல் விழுதுக் கூடத்திலே நின் வரவை காத்திருக்கேன்
வெள்ளி நிலா வந்திருச்சு உன்னைத்தான் காணலையே
சொப்பனங்கள் சேர்த்தணைத்து எழுதியதை ஏட்டில் வைத்து
அந்தி குளிக்கும் ஆதவனை அதிகாலை எழுப்பி வைப்போம்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...